TNPSC IMPORTANT QUESTIONS
:
*இந்தியா தனது அரசியல் அமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதியைக் குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது..*
*இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிய சிறு தகவல்கள் உங்கள் பயனுக்காக...*
*இந்தியாவுக்கு என்று ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் வேண்டும் என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் எம். என். ராய்*
*இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் டிசம்பர் 6 ,1946.*
*அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் டிசம்பர் 9, 1946.*
*இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் புதுடில்லி.*
*அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர்- டாக்டர்.ராஜேந்திர பிரசாத்.*
*இந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக (Drafting committee) செயல்பட்டவர் டாக்டர். அம்பேத்கார் அவர்கள்.*
*நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26,1949.*
*இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 26 ,1950.*
*இந்த அரசியலமைப்பு சட்டம் எழுத 2 வருடங்கள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஆகியுள்ளன.*
*இந்த அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு உண்டான அப்போதைய செலவு 64 லட்சம் ஆகும்.*
*உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.*
*நமது இந்திய அரசியலைப்பு சட்டம் பிரிட்டிஷ் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை தழுவி எழுதப்பட்டதாகும்..*
*இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த சரத் களின் எண்ணிக்கை 395.*
*தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை 448, பகுதிகள் - 25, அட்டவணைகள் -12 ஆகும்.*
*இந்திய அரசியலமைப்பின் படி இந்தியாவின் பெயர்- பாரத்.*
*அரசியலமைப்பின் இதயமாகவும், ஆன்மாவாகவும் உள்ள பகுதி என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களால் வர்ணிக்கப்பட்ட பகுதி- அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் ( ஷரத்து 32).*
*ஆகவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள் இன்று ஜனவரி 26.*
*இந்த நன்னாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை நினைவு கூறுவோம். அவர் வழி சட்டத்தை பின்பற்றி நடப்போம்.*
*டாக்டர். அம்பேத்கர் அவர்கள் சாதித் தலைவர் அல்ல....*
*அவர் சாதித்த தலைவர்.*
*நாம் என்ன சாதிக்கு பிறந்தோம் என்பது முக்கியமல்ல..*
*என்ன சாதிக்க பிறந்தோம் என்பதே முக்கியம்.*
🌞Tnpsc important questions🌞
💫
தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் யார்?
- வ.உ.சி
💫வங்க பிரிவினை நடைபெற்ற போது இந்திய அரசு பிரதிநிதியாக இருந்தவர் யார்?
- கர்சன் பிரபு
💫ஆகஸ்ட் நன்கொடை அளித்த ஆங்கில அரசு பிரதிநிதி யார்?
- லின்லித்தோ
💫முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்?
- சுபாஷ் சந்திரபோஸ் (1939)
💫இரு நாடுகள் கொள்கையை வெளியிட்டவர் யார்?
- முகம்மது அலி ஜின்னா
💫ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றுஅழைக்கப்பட்டது எது?
- இந்திய தேசிய ராணுவம்
💫 கிரிப்ஸ் தூதுக்குழு யோசனைகளை "பின் தேதியிட்ட காசோலை" என்று வர்ணித்தவர் யார்?
மோ.க.காந்தி
💫தனி நபர் சத்தியாக்கிரகம் தொடங்கியவர் யார்?
- ஆச்சார்யா வினோபா பாவே
💫"வகுப்பு கொடை" அறிவத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
- ராம்சே மெக்டொனால்ட்
💫வகுப்பு கொடையை எதிர்த்து மோ.க.காந்தி எந்த சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்?
- எரவாடா சிறை
💫சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு படுகாயம் அடைந்தவர் யார்?
- லாலா லஜபதி ராய்
💫 "பஞ்சாப் சிங்கம்" என்று போற்றப் பட்டவர் யார்?
- லாலா லஜபதி ராய்
💫'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்' என்ற நூலை எழுதியவர் யார்?
- தாதாபாய் நௌரோஜி
💫இரண்டாவது தனிநபர் சத்தியாக்கிரகம் நடத்தியவர் யார்?
- ஜவஹர்லால் நேரு
💫பூரண சுயராஜ்யம் (அல்லது) முழுச் சுதந்திரம் எந்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?
- லாகூர் (1929)
💫சுயராஜ்ய கட்சி யாருடைய மறைவிற்கு பின்னால் பலவீனமடைந்தது?
- சி.ஆர்.தாஸ்
💫இந்தியப் பிரிவினைக்கான திட்டத்தை அறிவித்தவர் யார்?
- மவுண்ட்பேட்டன் பிரபு
Tags:
Test