டாக்டர் ராதாகிருஷ்ணன் Important Notes Tnspc material
1. ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5.2. டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ல் செப்டம்பர் 5ஆம் தேதி தமிழ்நாட்டில் திருத்தணியில் இருக்கும் சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
3. 1952 - சுதந்திர இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. 1962 முதல் 1967 வரை குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராவார்.
5. 1954- இந்திய அரசின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. 6. 1948-49 அவர் யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7. 1946-UNESCO-வின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
8. 1933 முதல் 1937 வரை ஐந்து முறை தத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
9. 1923 இல் இவரின் அற்புதப் படைப்பான "இந்திய தத்துவம்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
10. 1948 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் பல்கலைக்கழக கல்வியின் தரத்தை ஆராய டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி குழு அன்றைய பிரதமர் நேருவால் அமைக்கப்பட்டது.
11. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும் ராதாகிருஷ்ணன் கல்வி குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
12. 1961- இவருக்கு ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசு(The Peace Prize of German Book Trade) வழங்கப்பட்டது.
13. 1962 முதல் இவர் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பு:
✍️ 1997ம் ஆண்டு முதல் தமிழக அரசு, நல்லாசிரியர் விருதை "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" என்ற பெயரில் வழங்கி வருகிறது.
✍️ உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 5.
Tags:
Tamil Study Materials