குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2022
❖ 14 வது குடியரசுத்துணைத்தலைவர் தேர்தல் ஆனது, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று நடைபற்றது.
❖ மக்களவை பொதுச் செயலாளர் உத்பால் குமார் சிங், இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
❖ இந்தியாவின் 14 வது குடியரசுத் துணைத்தலைவராக தேசிய ஜனநாயகக்கூட்டணியின் வேட்பாளர் ஜக்தீப் தங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
❖ இந்தத் தேர்தலுக்கான வாக்காளர் குழுவானது, 245 மாநிலங்களவை
உறுப்பினர்களையும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களையும் கொண்டது.
❖ மொத்தம் பதிவான 725 வாக்குக்குகளில் 528 வாக்குகளைப் பெற்று தேசிய ஜனநாயகக்
கூட்டணியின் வேட்பாளர் ஜக்தீப் தங்கர் 346 வாக்குகள் வித்தியாசத்தில் சைற்றி
பெற்றார்.
❖ 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
❖ இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்ரெட் ஆல்பா 182 வாக்குகளை பெற்றார்.
❖ 80 வயதான ஆல்பா காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஒரு மூத்த உறுப்பினர் ஆவார்.
❖ மேலும் இவர், ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றியுள்ளார்.
❖ மாநிலங்களவையின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மக்களவையின்
தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளடக்கிய 780 வாக்காளர்களில்
725 வாக்காளர்கள் இதில் வாக்களித்தனர்.
❖ இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குப் பதிவு 92.94% ஆகும்.