1)பொருத்துக
1 . கிழக்கு- மக்ரான்
2. மேற்கு- காகர் ஹாக்ரா நதி
3. தெற்கு -ஆப்கானிஸ்தான்
4. வடகிழக்கு -மகாராஷ்டிரா
A)2341 B) 2143 C) 4321 D) 4123
2) கூற்று 1: சிந்து சமவெளி மக்களிடையே வியக்கத்தக்க பொறியியல் திறன் இருந்திருக்கிறது.
கூற்று 2: மொஹஞ்சதாரோவில் காணப்படுகின்ற பெருங்குளம் உலகின் முதல் கட்டப்பட்ட பெருங்குளம் ஆகும்.
A) 1 மட்டும் தவறு B) 2 மட்டும் தவறு C) இரண்டுமே தவறு D) இரண்டும் சரி
3) குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்திலான அளவுகோல் ...............
வரை வீடுகளை கொண்டுள்ளது.
A) 1704 cm B) 1740cm C) 1704mm D) 1740 mm
4) கூற்று 1:மொஹஞ்சதாரோவில் மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு ஆகும் .
கூற்று 2: இது 20 தூண்கள் 4 வரிசைகளைக் கொண்டு பரந்து விரிந்த கூட ஆகும்.
A) 1 மட்டும் தவறு B) 2 மட்டும் தவறு. C) இரண்டும் தவறு D) இரண்டும் சரி
5) இந்தியாவில் தொல்லியல் துறை எந்த ஆண்டு நிறுவப்பட்டது
A) 1861 B) 1816. C) 1886. D) 1868
6) கூற்று 1:பழங்கால எழுத்துக்களை படிப்பதன் மூலம் அக்கால நாகரீகத்தை அறிந்து கொள்ளலாம்.
காரணம்: சிந்துவெளி எழுத்து இன்று வரை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
A) கூற்று மற்றும் காரணம் சரி
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று தவறானது, காரணம் சரி
D) கூற்று மற்றும் காரணம் தவறானவை.
7) சிந்துவெளி மக்கள் அறிந்திராத உலோகம் எது
A) இரும்பு B) தங்கம் C) செம்பு D)வெண்கலம்
8)கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு:
( 1) சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்புநிற மணி கற்களை பயன்படுத்தினர்.
(2) சிந்துவெளி மக்கள் பருத்தி ஆடைகளை பயன்படுத்தினர்.
(3) பெண்கள் மட்டுமே ஆபரணங்களை விரும்பி அணிந்து இருந்தனர்.
A) 1 2 3 சரி B) 1 2 மட்டும் சரி C) 1 3 மட்டும் சரி D) 3 2 மட்டும் சரி
9) ஆர். டி. பானர்ஜியால்
1922ல் கண்டறியப்பட்ட நகரம்
A) ஹரப்பா B) மொகஞ்சதாரோ C) லோத்தல் D) தோலவிரா
10) சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குனர் ஜெனரல் யார்?
A)சர் ஜான் மார்சல் B)ஆர்.டி. பானர்ஜி
C)டி.ஆர்.சகானி D)மாக்ஸ் முல்லர்
11) சிந்து சமவெளியில் மிகப்பெரிய நகரம் எது
A)ஹரப்பா B)மொகஞ்சதாரோ C)லோத்தல் D)காலிபங்கன்
12) சிந்துவெளி மக்களின் முக்கிய தொழில்
A)விவசாயம் B)வாணிகம் C) மீன் பிடித்தல் D)மட்பாண்டம் செய்தல்
13) சிந்து நாகரிகம் என்ற நூலின் ஆசிரியர்
A) மார்டிமர் வீலர்
B)மஜூம்தார்
C)பாஷ்யம்
D)ஐராவதம் மகாதேவன்
14)(1) சிந்து மக்களின் கப்பல் கட்டும் தளமாக லோத்தல் விளங்கியது.
(2)லோத்தல் தபதி ஆற்றின் கரையில் உள்ளது.
A) இரண்டும் சரி B)1 மட்டும் சரி
C) இரண்டும் தவறு D) 2 மட்டும் சரி
15) தவறானவை தேர்ந்தெடுக:
மெஹெர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு இடமாகும்.
இது ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
மெஹெர்கர் சிந்து வெளி நாகரீகத்துக்கு முன்னோடி என்று அழைக்கப்படுகிறது.
A)2 மட்டும் தவறு B) 1 3 சரி C) 2 3 தவறு D) எதுவும் இல்லை
16) பொருத்துக:
1 ) ராக்கிகார்ஹி- ஹரியானா
2) சர்கோட்டா -குஜராத்
3 ) பனாவலி- ராஜஸ்தான்
4 )தோலவிரா - குஜராத்
A)1234 B) 2314. C) 4321 D) 3421
17) ஹரப்பா மக்கள் கலப்பையை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளது
A) காலிபங்கன் B)அம்ரி C) மொகஞ்சதாரோ D) மந்தா
18) பொருத்துக:
சங்கு - ஷார்டுகை
வைடூரியம்-நாகேஷ்வர்பாலக்கோட்
கார்னிலியன்- லோத்தல்
செம்பு. - ராஜஸ்தான் ஓமன்
A)2134 B) 2143 C) 1234 D) 4123
19) மெலுகா என்ற சொல் எந்த பகுதியை குறிக்கிறது
A) சிந்து B)எகிப்து C) ஈரான் D)சீனா
20) கீழ்கண்டவற்றில் எது தவறானது எது
1)ஹரப்பா பகுதியிலிருந்து கன செவ்வக வடிவக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டது
2) இவர்கள் இரும எண் முறையை பின்பற்றினர்.
3) ஒரு இன்ச் என்பது=1.65cm ஆக கொள்ளும் விகிதத்தில் அளவுகோலை பயன்படுத்தினர்.
A) 1 3 B) 1 2 3 C) 1 2 D) எதுவும் இல்லை
21) தவறானது எது:
தொடக்ககால ஹரப்பா-3000-2600
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா- 2600-1900
பிற்கால ஹரப்பா- 1900- 1700
ஹரப்பா வீழ்ச்சி - 1700
A) 123 சரி B) 3 மட்டும் தவறு C) 1234 சரி D) 4 மட்டும் தவறு
22) ரோரிசெர்ட் படிவப்பாறை எந்தப் பகுதியில் உள்ளது
A) பாகிஸ்தான் B) ஜம்மு காஷ்மீர்
C) பஞ்சாப். D) ராஜஸ்தான்
23) ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்த முத்திரைகளும் பொருட்களும் கிடைத்த இடத்தில் அல்லாதது எது
A) ஓமன் B) பக்ரைன் C) ஈரான் D) பாகூர்
24) எது தவறானது:
(1)சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களை பயன்படுத்தினர்.
(2)சுமார் 4700 ஆண்டுக்கு முன் மலர்ந்தது.
(3)ஹரப்பா என்ற சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்று பொருள்.
A) 2 மட்டும் தவறு B) 1 3 சரி C) எதுவும் இல்லை D) 3 மட்டும் தவறு
25) கூற்று: ஹரப்பா நாகரிகம் நகர நாகரிகம்
காரணம்: திட்டமிடப்பட்ட நகரமைப்பு,மேம்பட்ட கழிவுநீர் அமைப்பு
A) கூற்றும் காரணமும் சரி
B) கூற்று தவறு,காரணம் சரி
C) கூற்று சரி, காரணம் தவறு
D) கூற்றும் காரணமும் தவறு