நிதி ஆயோக் பற்றிய முக்கிய Tnpsc Notes | Niti ayog | திட்டக்குழு பற்றிய தகவல்கள்

                

                    நிதி ஆயோக்


நிதி ஆயோக் - Think Tank- சிந்தனை குழு


NITI Ayog - National Institution for Transforming India  Ayog


இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம்


ஆகஸ்டு 15, 2014. திட்டகுழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் தொடங்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்


திட்டக்குழு கலைக்கப்பட்டது: Aug 17, 2014


______    _________  __________    _______

            


         நிதி ஆயோக் அமைப்பு


NITI Ayog உருவாக்கம்   -   Jan 1, 2015


நிதி ஆயோக் முதல் கூட்டம்: 8th  Feb 2015.


அமைச்சரவை குழுவின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கம்.


தலைவர் பிரதமர்(பதவி வழி) 


மத்திய அமைச்சர்கள் & அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக செயல்படுவர். 


இதன்  துணை துலைவர் நிர்வாக தலைவராக செயல்படுவார்


பரிந்துரை செய்த குழு - அஜய் சிப்பர் குழு. 


முதல் துணை தலைவர் : அரவிந்த் பனகாரியா 

தற்போது துணை தலைவர் : சுமன் பெர்ரி


முதல் CEO        - அமிதாப் காந்த் 

தற்போது CEO - R. சுப்ரமணியம்


சிறந்த நிர்வாகமான 7 தூண்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள். சார்பு, செயல்திறன் சார்பு, பங்கேற்பு, மேம்பாடு. அனைத்தையும் உள்ளடக்கியது. சமத்துவம், வெளிப்படை தன்மை..




பணிகள் :


* கூட்டுறவு  மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி உருவாக்குதல்


* நாட்டின் நிகழ்வுகளில் மாநிலங்களை பங்கெடுக்க வைத்தல்


* பரவலாக்கப்பட்ட திட்டமிடல்.


* தொலைநோக்கு & காட்சி திட்டமிடல்


* சிறந்த நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தீர்வு காணுதல்


* பிரச்சனைகளை தீர்த்தல் 

* வெளியுலக தொடர்பை ஒருங்கிணைத்தல்.


* உள்நாட்டு ஆலோசனை வழங்கதல் திறன் உருவாக்குதல் & கண்காணித்தல் & மதிப்படுதல்



ஐந்தாண்டு திட்டங்களின் வரலாறு (1934 - 1950)

முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு முந்தைய பொருளாதார முன்னெடுப்புகள்

1. விஸ்வேஸ்வரயா திட்டம் (1934)

இந்தியாவில் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையை முதன்முதலில் முன்மொழிந்தவர் சர் எம். விஸ்வேஸ்வரயா. இவர் தனது "Planned Economy for India" என்ற புத்தகத்தில் 10 ஆண்டு கால திட்டத்தை வகுத்தார்.

முக்கிய நோக்கம்: தொழில்துறை வளர்ச்சியை மையப்படுத்தி தேசிய வருவாயை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குதல்.

2. தேசிய திட்டக்குழு (1938)

சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ஜவஹர்லால் நேரு தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப் போர் மற்றும் அரசியல் சூழலால் இதன் பணிகள் முடங்கின.

3. பாம்பே திட்டம் (Bombay Plan - 1944)

இந்தியாவின் முன்னணி 8 தொழிலதிபர்கள் (டாடா, பிர்லா உட்பட) இணைந்து தயாரித்த 15 ஆண்டுகால திட்டம் இதுவாகும். இது கனரகத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்தது.

முக்கிய வரலாற்றுத் திட்டங்களின் ஒப்பீடு

திட்டத்தின் பெயர் ஆண்டு முன்மொழிந்தவர் மையக் கருத்து
காந்தியத் திட்டம் 1944 ஸ்ரீமன் நாராயண் அகர்வால் வேளாண்மை மற்றும் கிராமியத் தொழில்கள்
மக்கள் திட்டம் (People's Plan) 1945 எம்.என். ராய் (M.N. Roy) மக்களின் அடிப்படைத் தேவைகள்
சர்வோதயா திட்டம் 1950 ஜெயப்பிரகாஷ் நாராயணன் சுயசார்பு கிராமங்கள் (வினோபா பாவே ஈர்ப்பால்)

4. திட்டக்குழு உருவாக்கம் (மார்ச் 15, 1950)

கே.சி. நியோகி (K.C. Neogy) தலைமையிலான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், 1950 மார்ச் 15 அன்று திட்டக்குழு நிறுவப்பட்டது.

  • இது ஒரு அரசியலமைப்புச் சட்டம் சாராத மற்றும் ஆலோசனையளிக்கும் அமைப்பு (Non-Constitutional & Statutory body).
  • தலைவர்: பிரதமர் (முதல் தலைவர்: நேரு).
  • துணைத் தலைவர்: முதல் துணைத் தலைவர் குல்சாரிலால் நந்தா.

இந்த வரலாற்றுப் பின்னணியே 1951-ல் முதலாவது ஐந்தாண்டு திட்டம் பிறக்கக் காரணமாக அமைந்தது.

© 2026 இந்தியப் பொருளாதார ஆய்வுப் பதிவுகள்

إرسال تعليق

أحدث أقدم